சோனியாவைத் தொடர்ந்து பிரியங்காவுக்கும் கொரோனா!! அதிர்ச்சியில் தொண்டர்கள்!!660509341


சோனியாவைத் தொடர்ந்து பிரியங்காவுக்கும் கொரோனா!! அதிர்ச்சியில் தொண்டர்கள்!!


தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில், மீண்டும் சில மாநிலங்களில் அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பிரியங்கா காந்திக்கும் கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் பிரியங்கா காந்திக்கும் கொரோனா  பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் வீட்டிலேயே தனிமை படுத்திக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Comments

Popular posts from this blog